நாட்டையே புரட்டி போட்ட 4 தீர்ப்புகளுடன் குட்பை சொன்ன தீபக் மிஸ்ரா!
டெல்லி: இந்தியாவையே புரட்டி போட்ட 4 வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேற்றுடன் குட்பை சொன்னார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் அவருக்கு நேற்றைய தினமே பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. நேற்றுடன் குட் பை சொன்ன மிஸ்ராவை யாராலும் மறக்க முடியாது. செப்டம்பர் மாதத்தில் முக்கியமான 4 தீர்ப்புகளை வழங்கினார். இந்த தீர்ப்புகள் நாட்டியை புரட்டி போட்டன.
[ நிலநடுக்கத்தால் இடிந்த இந்தோனேஷிய சிறைகள்.. 1200 கைதிகள் தப்பியோட்டம்! ]

சட்டம் நீக்கம்
இந்தியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 377 பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி ஓரின சேர்க்கை குற்றமா என்பது குறித்த வழக்கின் மீது தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதில் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஓரினசேர்க்கை
அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை ஓரின சேர்க்கையாளர்கள் கொண்டாடினர்.

அரசு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்
வங்கிச் சேவை, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

தகாத உறவு குற்றமல்ல
கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 497-இன் கீழ் 5 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பெண்களுக்கு எந்த தண்டனையும் வழங்குவதில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு கள்ளக்காதல் குற்றமல்ல என்று கூறியதுடன் 497 சட்டபிரிவை ரத்து செய்தது.

முக்கிய தீர்ப்பு
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சபரிமலைக்கு பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை அளித்துள்ளது. இத்தகைய 4 முக்கிய வழக்குகளில் தீர்ப்பை வழங்கியுள்ளார் தீபக் மிஸ்ரா.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications