அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான ஏர்போர்ட் பாஸ் ரத்து, ஐடி கார்டுகளை திரும்பக் கேட்கும் இந்தியா
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்காக விசா மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவர் கடந்த வாரம் நியூயார்க்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அதிகாரிகள் அவரது ஆடைகளை களைந்து சோதனை செய்தது இந்திய அரசுக்கு பெருத்த அவமானமாக ஆனது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்குமாறு மத்திய அரசு அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய பாஸ்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இந்திய தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications