எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்- மத்திய அமைச்சர் பேச்சால் கொந்தளிப்பு- தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு!
டெல்லி: தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றிய மத்திய அமைச்சரின் பதிலில் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் இன்று லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது பேசிய டிஆர் பாலு, இலங்கையின் அதிபர் அனுர குமார திசநாயக்க, டெல்லி வந்த போது மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் கையாள்வோம் என்றார்; ஆனால் இலங்கை கடற்படை செய்து கொண்டிருப்பது வேறு. தமிழ்நாட்டு மீனவர்கள் நாள்தோறும் கைது செய்யப்படுகின்றனர்; மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் நாள்தோறும் வலியுறுத்துகின்றனர்.

ஆகையால் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காணும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி, தமிழ்நாட்டு மீனவர்களின் 200-க்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது; இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Today in Parliament, I raised the issue of over 200 boats belonging to Tamil fishermen that were seized by the Sri Lankan government, being sold off after what they call “nationalisation".
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 1, 2025
While the Tamil Nadu government continues to provide compensation to support the affected… pic.twitter.com/lJEaMf0jqW
இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் அவர்களது உடைமைகளை இலங்கை அரசு பறிமுதல் செய்கிறது எனக் குறிப்பிட்டார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் லோக்சபாவில் இருந்து தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications