காவிரி விவாகாரத்தில் விரைவில் நடவடிக்கை தேவை: திருச்சி சிவா எம்.பி.
டெல்லி: காவிரி பிரச்னையில் இதுவரை இருந்த மத்திய அரசுகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு காவிரி விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். தமிழகத்தில்தான் பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா இன்று (11ஆம் தேதி) பேசுகையில், 'கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்பட்டது'' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருச்சி சிவா பேசுகையில், ''சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி உரையில் எதுவும் கூறப்படவில்லை. மேலும், தமிழக பிரச்னைகள் பற்றி எந்த அம்சமும் இல்லை. தமிழகத்தில்தான் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
காவிரி பிரச்னையில் இதுவரை இருந்த மத்திய அரசுகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு காவிரி விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications