திமுக கூட்டணிக்கு 132, அதிமுகவுக்கு 95 தொகுதிகள்.. ஏபிபி செய்தி சேனல் எக்ஸிட் போல்
டெல்லி: ஏபிபி ஹிந்தி செய்தி சேனல் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பில், திமுக கூட்டணி,132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸிஸ் இந்தியா மற்றும், நியூஸ் நேஷன் ஆகிய தேர்தலுக்கு பிந்தைய, கருத்து கணிப்புகள், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறிய நிலையில், சி-வோட்டர் முற்றிலும் மாறுபட்ட நிலையை காட்டுகிறது.
சி-வோட்டர் கருத்துக்கணிப்புப்படி, தமிழகத்தில் அதிமுக கூட்டணி 139 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் கூட்டணி, 78 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது.

இதனிடையே ஏபிபி ஹிந்தி செய்தி சேனல் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பும் வெளியாகியுள்ளது. இதன்படி திமுக கூட்டணி,132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆளும் அதிமுக 95 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், பாஜக 1 தொகுதியில் வெல்லும் என்றும் ஏபிபி கூறுகிறது. அதேநேரம், ம.ந.கூ, பாமக போன்ற கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
3 கருத்து கணிப்புகள் திமுக சார்பாகவும், 1 கருத்து கணிப்பு மட்டும் அதிமுக ஆதரவாகவும் அமைந்துள்ளது. இதில் எது சரியான கணிப்பு என்பது மே 19ம் தேதி மதியத்திற்குள் தெரியவந்துவிடும். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 150 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications