மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுக ஆதரவு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது.
இந்த முறை தீர்மானம் வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தெலுங்கு தேசம் சார்பில் முதலில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாளை இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதனால் இப்போதே அரசியலில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தற்போது, தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லோக் சபாவில் திமுக கட்சிக்கு பலம் இல்லை என்றாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல் அனைத்து கட்சிகளும் இந்த வாக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதிமுக கட்சியும் இந்த வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.