24 மணிநேர தடையில்லா மின்சாரத்தை வழங்க மின்சாரத்துறை எப்படி நிதி பெறுகிறது தெரியுமா?
நாட்டிலுள்ள பல்வேறு மின்சார வினியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலை மாறி, சிறப்பாக செயல்பட மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள உதய் திட்டம் பெரும் பலனளிக்கும் என கூறப்படுகிறது.
டெல்லி: மின்தடையற்ற நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு சில ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசின் மின்சாரத்துறை இணை செயலாளர் ஏ.கே.வர்மா இதுகுறித்து கூறுகையில், 2030ம் ஆண்டுக்குள், மின்சாரத்துறை, 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க உள்ளது. மரபு சாரா எரிசக்தி மற்றும் வழக்கமான முறைகளில் தயாரிக்கப்படும் மின்சாரத் திட்டங்களில் இந்த முதலீடு ஈர்க்கப்பட உள்ளது.

சர்வதேச எனர்ஜி ஏஜென்சி (IEA) கணக்கீட்டுப்படி, 2015-2040ம் ஆண்டுகளுக்குள், இந்தியா சுமார் $ 845 பில்லியன் மதிப்புக்கு மின் மாற்றி மற்றும் சப்ளை துறைக்கு செலவிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர், பகிர்மான தானியங்கி நிலை, பேட்டரி ஸ்டோரேஜ் மற்றும் உள்ள ஸ்மார்ட் மார்க்கெட் பிரிவில் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா ரூ.2.9 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது.
சோலார் திட்டங்கள் மூலம் கூடுதலாக 100000 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்கள் வாயிலாக கூடுதலாக 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, ரூ.4.4 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது இந்தியா.
நாட்டிலுள்ள பல்வேறு மின்சார வினியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலை மாறி, சிறப்பாக செயல்பட மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள உதய் திட்டம் பெரும் பலனளிக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தால் நிதி பற்றாக்குறை நீங்கி, போதிய அளவுக்கு மின் உற்பத்தியில் ஈடுபட முடியும். Source- UDAY.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications