பெருத்துக் கொண்டே போனதால்.... 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி மருத்துவர்கள் சாதனை!
டெல்லி: டெல்லியில் நோயாளியின் உடலில் இருந்து பழுதடைந்த 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த ஒருவர் நீண்ட நாட்களாக அடிவயிற்றுப் பகுதியில் தீராத வலியுடன் அவதிப்பட்டு வந்தார். நாளடைவில் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேற தொடங்கியது. இதனையடுத்து, இதனையடுத்து அந்த நபர் கடந்த மாதம் டாக்டரிடம் சென்றார்.

அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் சிறுநீரக வீக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சிறுநீரில் கலந்து வெளியேறும் அதிக ரத்தப்போக்கால் நோயாளியின் நிலைமை நாளுக்குநாள் மோசமானது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இரு சிறுநீரகங்களை அகற்றிவிட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தினால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
நோயாளி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சிறுநீரக தானம் வழங்க முன்வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர்கள் முதலில் 2.75 கிலோ எடை கொண்ட அவரது ஒரு சிறுநீரகத்தை அகற்றி, வெற்றிகரமாக மாற்று சிறுநீரகத்தை பொருத்தினர். இதனையடுத்த ஒரு வாரத்தில் 2.5 கிலோ எடை கொண்ட அவரது பழுதடைந்த மற்றொரு சிறுநீரகமும் அகற்றப்பட்டது.
சராசரியாக ஒரு மனிதனின் சிறுநீரகம் 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும்பட்சத்தில் இவரது சிறுநீரகம் அதைவிட 20 மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்ததால் இந்த ஆபரேஷன் சற்று சிக்கலானதாக இருந்தது.
ஆனால், டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவைசிகிச்சையை செய்து உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுநீரகத்தை அகற்றிய மருத்துவர்கள்என்ற உலக சாதனையை படைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications