மமதா பேச்சில் திருப்தி.. ஒரு வார கால டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது!
ஒருவார காலமாக மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
கொல்கத்தா: ஒரு பக்கம் போராட்டம் நடத்தி கொண்டும், மறு பக்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சையை மேற்கொண்டும் வந்த போராட்டம் வாபஸ் பெற்றுவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் என்ஆர்எஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
டாக்டர்களின் அலட்சியத்தால்தான் நோயாளி இறந்தார் என்று கூறி உறவினர்கள் ஒரு டாக்டரை அடித்து தாக்கினர். அந்த டாக்டர் ஒரு பயிற்சி டாக்டர் என்று சொல்லப்படுகிறது.

போராட்டம்
இதை கண்டித்துதான், கொல்கத்தாவில் கடந்த 11-ஆம் தேதி முதல் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதே சமயத்தில் தலையில் ஹெல்மட் மாட்டிக் கொண்டும், பேண்டேஜ் அணிந்து கொண்டும் வேலை பார்த்தனர்.

மருத்துவ சேவை
கொல்கத்தா டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பும், "நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 24 மணி நேர சேவை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்தது. அதன்படியே நம் மாநிலத்திலும் இன்று காலை போராட்டம் தொடங்கியது.

கருப்பு பேட்ஜ்
ஒரேடியாக போராட்டத்தில் இறங்கிவிட்டால், நோயாளிகள் நிலைமை என்னாவது என்பதை உணர்ந்த நம் டாக்டர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்தபடி இன்று நாள் முழுவதும் வேலை செய்தனர். எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஹெல்மட் போட்டுக் கொண்டு வேலை பார்த்தனர்.

மமதா பானர்ஜி
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு டாக்டர்களுக்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதன்படி டாக்டர்கள் சார்பில் 31 பேரும், மம்தா பானர்ஜி மற்றும் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து.

குறைதீர் மையம்
அப்போது, டாக்டர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் உரிய பாதுகாப்பு தரப்படும் என்று மம்தா உறுதி சொன்னார். ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும், போலீஸ் பாதுகாப்புப் போடப்படும் என்றும், டாக்டர்களின் பிரச்சனைகளை போக்க குறைதீர் மையம் புதிதாக அமைக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.

அறிவிப்பு
மேலும், இதுவரை ஸ்டிரைக்கில் ஈடுபட்ட எந்த டாக்டர்கள் மீதும் எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று சொன்ன மம்தா, ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். தங்களது கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக் கொண்டதால், நடத்தி வரும் ஸ்டிரைக்கை வாபஸ் பெற போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications