பக்கத்து வீட்டு பூந்தொட்டியில் சிறுநீர் கழித்த நாய்...சரமாரியாக அடி வாங்கிய நாயின் உரிமையாளர் !
டெல்லி: டெல்லியில் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டு பூந்தொட்டியில் சிறுநீர் கழித்ததால், அந்த நாயின் உரிமையாளருக்கு சராமரி அடி உதை விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லி கல்யான்புரி பகுதியில் வசித்து வருபவர் ரமணி சவுத்ரி. இவரது மகன் தேவேஷ் தினந்தோறும் நாயை வாக்கிங் அழைத்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு தனது நாயை வெளியே வாக்கிங் அழைத்துச் சென்றார்.
அப்போது அந்த நாய் ரமணி வீட்டின் அருகில் உள்ள ப்ரிஜ் லால் என்பவரது வீட்டுமுன் வைத்திருந்த பூந்தொட்டி மீது சிறுநீர் கழித்தது. இதனால் ப்ரிஜ் லால் மகன் மணிஷ், தேவேஷ் உடன் தகராறு செய்தார்.இந்த தகராறு பின்னர் கைகலப்பாக மாறியது.
மணிஷ், அவரது சசோதரரர் அனுஜ் மற்றும் தந்தை ஆகியோர் தேவேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் ரமணியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாய் சிறுநீர் கழித்த விவகாரத்திற்கான இரு குடும்பத்திற்கிடையே சண்டை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிஷை கைது செய்துள்ளனர். தப்பியோடிய அவரது சசோதரர் மற்றும் தந்தை ஆகியோரை தேடி வருகிறார்கள்.