என் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை தேவையில்லாமல் கைது செய்கிறார்கள்.. நீரவ் மோடி பகீர்
தன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை சிபிஐ தேவையில்லாமல் கைது செய்கிறார்கள் என்று நீரவ் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
டெல்லி: தன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை சிபிஐ தேவையில்லாமல் கைது செய்கிறார்கள் என்று நீரவ் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது. அவர் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மெயில் அனுப்பி இருக்கிறது
ஆனாலும் அவர் எங்கே இருக்கிறார் என்று சரியாக தெரியாத காரணத்தால் சிபிஐ தரப்பு அவருக்கு மெயில் அனுப்பி இருக்கிறது. விசாரணை நடக்க இருக்கிறது நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறது. ஆனால் அவர் வேலையில் பிசியாக இருப்பதாக பதில் அளித்தார்.

எட்டு மணிக்கு மேல்
இந்த நிலையில் நீரவ் மோடி நிறுவனத்தில் வேலை செய்யும் முக்கியமான பெண் அதிகாரி ஒருவரை இரண்டு நாட்கள் முன்பு சிபிஐ கைது செய்து இருக்கிறது. பெண்களை 6 மணிக்கு மேல் சில முக்கிய காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக கைது செய்ய கூடாது என்று விதி இருக்கிறது. சிபிஐ இந்த விதியை மீறியுள்ளது.

கடிதம் எழுதினார்
இதுகுறித்து நீரவ் மோடி கடிதம் எழுதி இருக்கிறார். சிபிஐக்கு அவர் எழுதிய கடிதத்தில் ''என் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை தேவையில்லாமல் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முழுக்க முழுக்க முறைகேடானது'' என்று கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஹாங்காங்கில் மோடி
இந்த நிலையில் அவர் இருக்கும் இடம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. முதலில் அவர் அமெரிக்காவில் இருக்கிறார் எனப்பட்டது. பின் அவர் மேற்கிந்திய தீவுகளில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் இப்போது ஹாங்காங்கில் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications