விமான விபத்தில் நேதாஜி மரணம்... உண்மையில்லை என்கிறார் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: தைவான் விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காயமடைந்து உயிரிழந்ததாகக் கூறுவதில் உண்மையில்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. அவர் 1945ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் உயிரிழந்ததாக ஒரு தரப்பினரும், இல்லையில்லை அவர் அதற்குப் பின்னரும் உயிர் வாழ்ந்தார் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேதாஜி விமான விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து இங்கிலாந்து இணையதளமான போஸ்பைல்ஸ் தொடர்ந்து ஆவணங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தைவான் விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தான் நேதாஜி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேதாஜியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர், 2 ஜப்பான் மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர், ஒரு தைவான் செவிலியர் ஆகிய 5 சாட்சியங்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இத்தகவலை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், ‘நேதாஜி மரணம் பற்றிய உண்மை நிலையை வெளிகொண்டு வராமல் இருப்பது, நாட்டிற்கே அவமானம்' என்றார்.
மேலும், நேதாஜியின் சர்ச்சை பற்றி ரஷ்யா கூறிய கருத்துக்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என தெரிவித்த அவர், நாட்டின் தந்தை மகாத்மா காந்தி என்றால், நாட்டின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றும், அவரது இறுதிக் காலம் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் விருப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications