ரூ.5 கோடி அபராதம் கட்ட முடியாது.... ஜெயிலுக்கு போகவும் தயார்.. சொல்வது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
டெல்லி: யமுனை நதிக்கரை ஓரத்தில் விதிமுறைகளை மீறி நிகழ்ச்சி நடத்துவதற்கு அபராதமாக ரூ5 கோடி கட்ட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது; அபராதம் கட்ட முடியாது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
டெல்லி யமுனை நதிக்கரையில் 1,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உலக கலாசார நிகழ்ச்சியை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்காக மத்திய அரசும் ரூ2.2 கோடி நிதி உதவி அளித்திருக்கிறது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுமாறு கூறிய உச்சநீதிமன்றம், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி ரூ5 கோடி அபராதம் கட்ட முடியாது என்று கூறியிருக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். இது குறித்து அவர் கூறுகையில், அபராதம் கட்ட முடியாது; இதற்காக நீதிமன்றம் என்னை சிறைக்கு அனுப்ப விரும்பினால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கான கட்டுமானங்கள் அனைத்தும் தற்காலிகமானவை. நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைத்தும் கலைக்கப்பட்டுவிடும் என்றார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார். அவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், யமுனை நதிக்கரை நிகழ்ச்சிக்காக அதிகாரிகளை நோக்கி பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன; ஆனால் உண்மையில் யமுனை துர்நாற்றம் வீசக்கூடிய சாக்கடை வடிகாலாகத்தான் இருக்கிறது. யமுனை நதி தூய்மைப்படுத்தப்பட்டு அதன் கரைஓரங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

தற்போது வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் ரூ5 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. யமுனை நதிக்கரை நிகழ்ச்சி சட்டப்பூர்வமானதா? அல்லது இல்லையா? என்பதற்கு அப்பால் முன்கூட்டியே அபராதம் விதிப்பது என்பது முன் ஜாமீன் பெறுவதைப் போலத்தான் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications