ரூ.5 கோடி அபராதம் கட்ட முடியாது.... ஜெயிலுக்கு போகவும் தயார்.. சொல்வது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
டெல்லி: யமுனை நதிக்கரை ஓரத்தில் விதிமுறைகளை மீறி நிகழ்ச்சி நடத்துவதற்கு அபராதமாக ரூ5 கோடி கட்ட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது; அபராதம் கட்ட முடியாது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
டெல்லி யமுனை நதிக்கரையில் 1,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உலக கலாசார நிகழ்ச்சியை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்காக மத்திய அரசும் ரூ2.2 கோடி நிதி உதவி அளித்திருக்கிறது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுமாறு கூறிய உச்சநீதிமன்றம், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி ரூ5 கோடி அபராதம் கட்ட முடியாது என்று கூறியிருக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். இது குறித்து அவர் கூறுகையில், அபராதம் கட்ட முடியாது; இதற்காக நீதிமன்றம் என்னை சிறைக்கு அனுப்ப விரும்பினால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கான கட்டுமானங்கள் அனைத்தும் தற்காலிகமானவை. நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைத்தும் கலைக்கப்பட்டுவிடும் என்றார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார். அவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், யமுனை நதிக்கரை நிகழ்ச்சிக்காக அதிகாரிகளை நோக்கி பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன; ஆனால் உண்மையில் யமுனை துர்நாற்றம் வீசக்கூடிய சாக்கடை வடிகாலாகத்தான் இருக்கிறது. யமுனை நதி தூய்மைப்படுத்தப்பட்டு அதன் கரைஓரங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

தற்போது வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் ரூ5 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. யமுனை நதிக்கரை நிகழ்ச்சி சட்டப்பூர்வமானதா? அல்லது இல்லையா? என்பதற்கு அப்பால் முன்கூட்டியே அபராதம் விதிப்பது என்பது முன் ஜாமீன் பெறுவதைப் போலத்தான் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications