ரத்ததானம் செய்தால் வெங்காயம், பெட்ரோல் பரிசு
சூரத்: குஜராத்தில் நடந்த ரத்ததான முகாமில் ரத்த தானம் செய்தோருக்கு வெங்காயமும், பெட்ரோல் வவுச்சரும் பரிசாக வழங்கப்பட்டது.
குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள உத்னாவில் இருக்கும் த்ரிஷ்லா பார்க் சொசைட்டியில் 22.9.2013 அன்று ரத்ததான முகாம் நடந்தது. ரத்ததானம்
செய்வோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பரிசால் கூட்டம் முந்தியடித்தது.
கூட்டம் அதிகமானதால் முகாமை பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
வெங்காயம், பெட்ரோல் பரிசு
முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்வோருக்கு ஒரு கிலோ வெங்காயம் மற்றும் ரூ.100 மதிப்புள்ள பெட்ரோல் வவுச்சர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
போட்டா போட்டி
பரிசை கேள்விப்பட்ட மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த சுமார் 100 பேருக்கு ஒரு கிலோ
வெங்காயமும், பெட்ரோல் வவுச்சரும் வழங்கப்பட்டது. வவுச்சரை உத்னாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கொடுத்து பெட்ரோல் வாங்கிக் கொள்ளலாம்
பரிசு
ரத்ததானம் செய்தோருக்கு மொத்தம் ரூ.7,500 மதிப்புள்ள வவுச்சர்களும், ரூ.5,250 மதிப்புள்ள வெங்காயமும் பரிசாக வழங்கப்பட்டது.
75 யூனிட் ரத்தம்
முகாமில் 75 யூனிட் ரத்தம் கிடைத்தது. அது சூரத் முனிசிபல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச்சுக்கு வழங்கப்பட்டது.