அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை.. ராஜ்நாத் சிங்கிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

அனிதா மரணம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. அவரது மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனுமா என்றெல்லாம் கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து அவரிடம் இதுதொடர்பாக கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அனிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications