வந்தது புது சட்டம்.. கோவா செல்லும் சுற்றுலா பயணிகளே உஷார்.. இதை செய்தால் 3 மாதங்கள் சிறைதான்
Recommended Video

பானாஜி: கோவாவின் கடற்கரைகளில் மது குடிப்பது அல்லது சமையல் செய்வது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால், ரூ. 2,000 அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைதண்டனை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், சுற்றுலா வர்த்தக சட்டம் பதிவு, திருத்தத்தின் படி இந்த புதிய விதிமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 29 ம் தேதி தொடங்கும் மாநில சட்ட சபை அமர்வில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்கோன்கர் தெரிவித்துள்ளார்.

கைதுக்கு வாய்ப்பு
"கடற்கரையில் பாட்டில்களை உடைப்பது, கடற்கரைகளை போன்ற பொது இடங்களில் மது அருந்துவது, சமைப்பது போன்றவற்றை தடுக்க இந்த திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறோம். அவ்வாறு செய்தால் அபராதம் 2,000 ரூபாயாக இருக்கும். அபராதம் செலுத்தப்படாவிட்டால், குற்றவாளி கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு சிறையிலடைக்கப்படலாம் "என்று அஜ்கோன்கர் மேலும், கூறினார்.

சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு
கோவாவில் மதிப்புள்ள சுற்றுலா பயணிகள் வருகையை ஈர்ப்பதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதாக சமீபகாலமாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த இரு வருடங்களாக கோவா வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு, அங்கே அநாகரீக செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதுதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான், புதிய சட்டத் திருத்தத்தை கோவா மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

தப்ப முடியாது
குடித்துவிட்டோ, பாட்டிலை உடைத்துவிட்டோ அல்லது பொது இடத்தில் சமைத்துவிட்டோ யாரும் தெரியாமல் தப்ப முடியாது. அந்த குற்றவாளிகளின் புகைப்படங்கள், சுற்றுலாத்துறையினரின் வாட்ஸ்அப் மூலம் பரிமாரப்பட்டு எங்கேயிருந்தாலும் பிடிக்கப்படுவார்களாம்.

உஷாரய்யா, உஷார்
வீக் என்ட்டுக்கு கோவா செல்வோரே, அரசின் இந்த புதிய உத்தரவை மனதில் வைத்து செல்லுங்கள். அல்லது, சுற்றுலா சென்றுவிட்டு 3 மாதங்கள் அங்கேயே சிறை தண்டனை அனுபவித்து 4வது மாதம்தான் ஊருக்கு திரும்பும் நிலை ஏற்படக்கூடும். உஷார்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications