அமைச்சர் முண்டேவின் கார் மீது மோதிய இன்டிகா டிரைவர் ஜாமீனில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் கார் மீது மோதிய டாடா இன்டிகாவின் டிரைவர் குர்விந்தர் சிங் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை மாருதி சுசுகி எஸ்.எக்ஸ்.4 காரில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் கார் மீது டாடா இன்டிகா கார் மோதியதில் முண்டே காயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Driver of Indica car arrested for collision with Munde's car

இந்நிலையில் டாடா இன்டிகா காரை ஓட்டி வந்த குர்விந்தர் சிங்(32) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

குர்விந்தர் சிங் தான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தான் சிவப்பு விளக்கு பொருத்தி வந்த கார் மீது மோதிவிட்டதாக தகவல் கொடுத்தார். அவர் இம்பீரியல் ஹோட்டலில் வேலை செய்பவர் என்றனர்.

குர்விந்தர் தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+