டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஆளில்லா குட்டி விமானம் பறந்ததால் பதற்றம்- பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்றம் அருகே சிறிய ரக ஆளில்லா விமானம் தாழ்வாக பறந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று இரவு நாடாளுமன்ற பகுதியில் சிறிய ரக ஆளில்லா விமானம் தாழ்வாக பறந்து சென்றது. இந்த தகவலைத் தொடர்ந்து டெல்லியில் பதற்றம் ஏற்பட்டது.

மேலும் நாடாளுமன்றத்தைச் சுற்றிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Security tightened outside Parliament after a drone was spotted flying near the Parliament in Delhi pic.twitter.com/7cwhjgcuzJ
— ANI (@ANI_news) October 17, 2015 அத்துடன் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. அந்த ஆளில்லா விமானம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications