For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணி அடிங்க... குடிபோதையில் கரும்பலகையில் எழுதி மாணவர்களை வாசிக்க வைத்த ஆசிரியர்

By Siva
Google Oneindia Tamil News

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு கரும்பலகையில் மது அருந்துங்கள் என எழுதி அதை மாணவர்களை வாசிக்கும்படி செய்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ஷிவ்பரண். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.

'Drunk' teacher scribbles 'Daaru Piyo' on blackboard, asks students to repeat

குடிபோதையில் அவர் கரும்பலகையில் மது அருந்துங்கள் என்று எழுதி அதை மாணவர்களை பலமுறை வாசிக்க வைத்துள்ளார். இந்த சம்பவத்தை பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பின்னர் ஷிவ்பரண் கூறுகையில்,

நான் எனது தவறை ஒப்புக் கொள்கிறேன். நான் முன்பும் கூட பலமுறை மது அருந்துவிட்டு வந்து பள்ளியில் பாடம் நடத்தியுள்ளேன். இனி இது போன்று நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி ஷிவ்பரண் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் ஜா தெரிவித்துள்ளார்.

English summary
A teacher of a government school in Chhattisgarh was found writing drink alcohol on the blackboard and asked the students to repeat it. He did this under the influence of alcohol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X