வெறுங்கையுடன் தீவிரவாதிகளை துரத்தி ஒருவனை கொன்று வீரமரணம் அடைந்த ஹவில்தார் ஜகதீஷ்
சிம்லா: பதன்கோட் தீவிரவாத தாக்குதலில் பலியான பதுகாப்பு படை வீரர்களில் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹவில்தார் ஜகதீஷும் ஒருவர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த 5 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹவில்தார் ஜகதீஷும் ஒருவர்.
இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீ்ஷ் சந்த்(48). கடந்த 2009ம் ஆண்டு டோக்ரா ரெஜிமென்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீர்ல மாநிலம் லேவில் பணியாற்றிய அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பதன்கோட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10 நாட்கள் விடுமுறையில் கிராமத்திற்கு சென்றிருந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை தான் பணிக்கு திரும்பியுள்ளார். திருமணமான அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சனிக்கிழமை காலை ஜகதீஷ் உள்பட சில ஜவான்கள் சமையல் அறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.
சமையல் அறையில் வெளிச்சம் தெரிவதை பார்த்த தீவிரவாதிகள் அந்த பக்கம் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது ஜகதீஷ் வெளியே ஓடி வந்து வெறுங்கையுடன் தீவிரவாதிகளை துரத்திச் சென்றுள்ளார்.
அதில் ஒரு தீவிரவாதியை பிடித்து அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து அவரை ஜகதீஷ் சுட்டுக் கொன்றுள்ளார். இதை பார்த்த பிற தீவிரவாதிகள் ஜகதீஷை சுட்டுக் கொன்றனர்.












Click it and Unblock the Notifications