அந்தமான் நிக்கோபர் தீவில் நிலநடுக்கம்!
இன்று காலை அந்தமான் நிக்கோபர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 5.9ஆக பதிவாகியுள்ளது.
போர்ட்பிளேர்: அந்தமான் நிக்கோபர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 என பதிவாகியுள்ளது. ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
அந்தமான் நிக்கோபர் தீவுகள், இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இந்த தீவுகளில் 2004ஆம் ஆண்டு ஏற்படட் சுனாமி, அதிக அளவிலான பாதிப்புகளை உருவாக்கியது. சுனாமியால் 2000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

கடல் பகுதி என்பதால், இங்கு அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது, நிக்டர் அளவுகோளில் 5.9 என பதிவாகியுள்ளது. ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு, அந்தமான் நிக்கோபர் தீவில் அடுத்தடுத்து எட்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications