நிலநடுக்கம்: உயர்மட்ட குழுவுடன் 3 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நில நடுக்கம் தொடர்பாக உயர் மட்ட குழு ஆலோசனைக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்புவிடுத்துள்ளார்.
நேபாளத்தை மையம் கொண்டு தாக்கிய நில நடுக்கத்தால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நேபாள பிரதமரை மோடி தொலைபேசியில் அழைக்க முயன்றார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேபாள குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.
இந்தியா சார்பில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக மோடி வாக்களித்தார். இந்நிலையில், இந்தியாவின் சேத விவரம் மற்றும் நேபாள மீட்பு பற்றி ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய இந்த கூட்டம் மதியம் 3 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications