Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் சின்னத்துடன் வாக்களித்த வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: வாக்குச்சாவடிக்குள் கட்சி சின்னத்துடன் நுழைந்த வாரணாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் தமது குர்தாவில் கை சின்னத்தை பொருத்தியபடியே இன்று வாக்களித்தார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

EC directs Varanasi Returning Officer to file FIR against Cong candidate Ajay Rai

வாக்குச் சாவடிக்குள்ளேயே அஜய் ராய் தாம் போட்டியிடும் சின்னத்தை கொண்டு வந்ததது விதிமீறல் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் தெரிவித்துள்ளது. விதிமீறலே இது குறித்து கருத்து தெரிவித்த வாரணாசி தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் பிரவீன்குமார், வாக்குச் சாவடிக்குள் சின்னங்களை காண்பிப்பது விதிமீறல்தான். இது குறித்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இதனிடையே அஜய் ராய் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையம், வாரணாசி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி.யில் லேப் டாப் சர்ச்சை சின்னத்துடன் காங். வேட்பாளர் வாக்களித்தது விதிமீறலே - வாரணாசி தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் சந்தெளலி என்ற வாக்குச் சாவடியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் மற்றும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் படத்துடன் கூடிய லேப் டாப் பயன்படுத்தப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+