'கொலை பேச்சு': தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதிலளிக்க ராகுல்காந்திக்கு மேலும் 3 நாள் அவகாசம்
டெல்லி: தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதிலளிக்க ராகுல்காந்திக்கு மேலும் 3 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் 22ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்ற ராகுல்காந்தியின் பிரச்சாரத்துக்காக இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் சோலன் பகுதியில் மே 1ம்தேதி நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பாஜக ஆட்சிக்கு வ ந்தால் கலவரம் ஏற்பட்டு அதில் 22 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றார். இந்த பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அதில் அடிப்படை ஆதாரம் இருப்பதாக முடிவுக்கு வந்தது.
இதையடுத்து ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்த தேர்தல் ஆணையம் மே 12ம் தேதி காலை 11 மணிக்குள் நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற காலக்கெடுவுடன் ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இன்று ராகுல்காந்தி பதில் அளிக்கவில்லை. அவர் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மேலும் மூன்று நாட்கள் காலக்கெடுவை நீட்டித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications