கடல் மார்க்கமாக பணக் கடத்தல்... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
டெல்லி: சாலை மார்க்கமாக சோதனைகளை போலீஸார் மூலம் தேர்தல் ஆணையம் இறுக்கியுள்ளதால் கடல் மார்க்கமாக பணத்தை கடத்தி வந்து வாக்காளர்களுக்கு கொடுக்கும் வேலையில் கட்சிகள் இறங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும் கருப்புப் பணத்தையும் இப்படி கடல் மார்க்கமாக பாஸ் செய்து தேர்தல் பணிகளுக்கு கட்சிகள் செலவிட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. பணம் மட்டுமல்லாமல், பல்வேறு பொருட்கள், தங்கம், மது உள்ளிட்டவையும் கடல் மார்க்கமாக கடத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில கடலோரப் போலீஸார், கடலோரக் காவல் படையினர் உஷாரான முறையில் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கிழக்குக் கடற்கரை முழுவதும் தீவிரக் கண்காணிப்பும், ரோந்தும் முடுக்கி விடப்பட்டுள்ளனவாம்.
இப்படிப்பட்ட கடத்தலுக்கு மீனவர்கள் துணை போகக் கூடாது என்று, யாராவது இப்படி நடந்தால் அதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்றும் மீனவர்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மீனவர் கிராமங்களிலும் அதிகாரிகள் நேரில் போய்க் கூறி வருகின்றனராம்.
தமிழக கடலோரப் பகுதிகளில் தற்போது போலீஸார் தீவரக் கண்காணிப்பையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications