மேற்கு வங்கம் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு - மமதா பாதுகாப்பு அதிகாரி உள்பட பலர் அதிரடி இடமாற்றம்
மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலை பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் அங்கு பல அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மமதாபானர்ஜியின் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கமாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமையுடன் ஓய்ந்தது.

தேர்தல் பிரசார விதிமீறல் தொடர்பாக மமதா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ்களுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் மமதா பானர்ஜி. தேர்தல் ஆணையம் பாஜகவின் தூண்டுதலின் பேரில் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மமதா,வாக்குப்பதிவு நாளில் பிரதமர் பிரசாரம் செய்கிறாரே, இது தேர்தல் நடத்தைவிதிகள் மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தின் பாதுகாப்பு இயக்குநரக அதிகாரி அசோக் சக்கரவர்த்தியை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதே போல 3 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநில தலைமைச் செயலளருக்கு எழுதிய கடிதத்தில் உடனடியாக இந்த இடமாற்றம் அமலுக்கு வருவதாகவும் இந்த அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பாக எந்த பணியும் வழங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளைத் தவிர, மேலும் பல அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டோலிகஞ்ச் சட்டசபைத் தொகுதியின் கீழ் வரும் ரீஜண்ட் பார்க் மற்றும் பாஸ்டிரோனி காவல் நிலையங்களின் பொறுப்பாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். ரீஜண்ட் பூங்காவின் பொறுப்பாளர் ஓ.சி மிருணல்காந்தி முகர்ஜி சிறப்பு கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார் அதே போல பாஸ்டிரோனி ஓ.சி. பிரதாப் பிஸ்வாஸ் கொல்கத்தா காவல்துறை துப்பறியும் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் 5ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17ஆம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 22 ஆம் தேதியும் நடைபெறும். 7ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும் 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications