நித்யானந்தா எங்கே இருக்கிறார்?.. கைலாசா வெப்சைட் ஐ.பி. அட்ரஸை வைத்து கண்டுபிடிப்பு.. பரபர தகவல்கள்
Recommended Video
டெல்லி: நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பது பற்றி ஈகுவடார் அரசு பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.
பாலியல் புகார், கடத்தல் புகார்களுக்குள்ளான நித்யானந்தா அமெரிக்காவின் ஈகுவடாரில் பதுங்கியிருப்பதாகவும் அவர் அங்கு எல்லைகளற்ற தனித்தீவை விலைக்கு வாங்கியதாகவும் அந்த தீவுக்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லை என ஈகுவடார் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் அவர் ஈகுவடார் நாட்டிற்கு எப்போது வந்தார், அங்கிருந்து அவர் ஏன் வெளியேற்றப்பட்டார் போன்ற விளக்கங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

துறைமுக நகர்
இதுகுறித்து அந்த நாடு அளித்த விளக்கத்தில் நித்யானந்தா கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி முதல்முறையாக ஈகுவடார் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வந்தார். அந்த நாட்டின் குயாக்குல் என்ற துறைமுக நகருக்கு அருகே அவர் தங்கியிருந்தார்.

ஆகஸ்ட் மாதம்
இந்த நிலையில் சர்வதேச பாதுகாப்பு கேட்டும் ஈகுவடார் நாட்டின் அகதியாக ஏற்றுக் கொள்ள அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். இதையடுத்து அங்கு அவர் அக்டோபர் 19-ஆம் தேதி வரை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வெளியேற்றம்
மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றத்தை அவர் நாடினார். இதனால் அவரை அந்த நாட்டிலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேற்றப்பட்டார்.

ஐபி அட்ரஸ்
அந்நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர் தான் அடுத்து செல்லவுள்ள இடம் கரீபியன் கடல் அருகே ஹைட்டி என்ற தீவு என நித்யானந்தா சொல்லியதாக ஈகுவடார் அரசு தெரிவித்தது. நித்யானந்தாவின் கைலாசா இணையதளத்தின் ஐபி அட்ரஸ் அடிப்படையில் அவர் பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் இருக்கலாம் என தெரிகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications