கடன் பாக்கி: விஜய் மல்லையாவின் ரூ.1411 கோடி சொத்து முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1411 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதனால் இந்தியாவில் இருந்து தப்பி சென்று இங்கிலாந்தில் வசிக்கிறார் விஜய் மல்லையா. அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவருக்கு எதிராக பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனம் செய்யுமாறு மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்ட தனிநீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவின் ரூ.1411 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக இன்று முடக்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐடிபிஐ வங்கியுடன் தொடர்பான வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications