அன்னிய செலாவணி மோசடி, 420, 120 பி.. லலித் மோடி மீது புதிய பிரிவுகளில் வழக்கு
டெல்லி: லண்டனில் தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய அரசியலில் பரபரப்பை கிளப்பி வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை இந்தியா கொண்டு வரும் வகையில் நெருக்கடி அளிக்க அமலாக்கப் பிரிவு புதிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2009-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.425 கோடி ஊடக உரிமம் வழங்கியதில் லலித் மோடியும் மேலும் சிலரும் ரூ.125 கோடி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்படி வழக்கு ஒன்றை மத்திய அமலாக்க பிரிவு பதிவு செய்துள்ளது.
தற்போது லலித் மோடி உள்ளிட்டோர் மீது ‘பெமா' என்னும் அன்னியச்செலாவணி பராமரிப்பு சட்டப்பிரிவுகளையும் மத்திய அமலாக்க பிரிவு புதிதாக சேர்த்துள்ளது. அத்துடன் ஐ.பி.சி. 420 (மோசடி), 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளையும் அமலாக்கப் பிரிவு சேர்த்துள்ளது.
பொதுவாக பெமாவில் சிவில் வழக்காக குற்றம் சுமத்தாமல் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்ட பிரிவுடன் கூடிய அன்னியச்செலாவணி விதி மீறல்கள் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் எளிதாக வெளிநாட்டு ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறது அமலாக்கப் பிரிவு. தற்போதைய நிலையில் அமலாக்கப் பிரிவு 17 குற்றச்சாட்டுகளை லலித் மோடி சுமத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications