கலைஞர் டி.வி. வழக்கு விசாரணை- தயாளு அம்மாள் ஆஜராகவில்லை: கோர்ட்டில் இ.டி அதிகாரி சாட்சியம்
டெல்லி: கலைஞர் டி.வி,க்கு ரூ200 கோடி பணம் கைமாறியது தொடர்பான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஜராகவில்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரி கமல்சிங் சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டி.வி.க்கு ரூ200 கோடியை ஸ்வான் நிறுவனம் கொடுத்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த தொடங்கிய போது அவசரம் அவசரமாக இந்த பணம் 'கடனாக' பெறப்பட்டு 'திருப்பி' கொடுக்கப்பட்டதாக கலைஞர் டி.வி. அறிவித்தது.

இந்தப் பணப்பரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக அமலாக்கப் பிரிவும் தனியே வழக்குப் பதிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை உதவி இயக்குநர் கமல்சிங் நேற்று சாட்சியம் அளிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் 28-ந் தேதிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தயாளு அம்மாளூக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
கலைஞர் டிவி தொடர்பான சில ஆவணங்களையும் சம்மனில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டோம். ஆனால் அந்த ஆவணங்களை அவர் தாக்கல் செய்யவில்லை. விசாரணைக்கு தயாளு அம்மாள் ஆஜராகாதவில்லை. உடல்நிலை சரியில்லை என மகள் செல்வியிடமிருந்து கடிதம் மட்டும் வந்தது என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications