சோனியா, ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு... மீண்டும் கையில் எடுக்கிறது அமலாக்கத் துறை!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீதான நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கை அமலாக்கத் துறை மீண்டும் கையில் எடுத்து வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. ரூ90 கோடி கடன் இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது.

இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து கடனை அடைத்தனர்.
இதற்கு பிரதிபலனாக அப்பத்திரிகைக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை இருவரும் அபகரித்துக் கொண்டனர் என்பது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி புகார்.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கின் விசாரண நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா, சுமன் துபே, ஆஸ்கார் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு டெல்லி கீழ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு டெல்லி தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதனிடையே சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மோசடி செய்ததற்கான முகாந்திரம் இல்லாததால் அவர்கள் மீது பண மோசடி வழக்கைப் பதிவு செய்ய இயலாது என கடந்த மாதம்தான் அமலாக்கத்துறை முடிவு செய்தது. சோனியா, ராகுல் மீதான இந்த வழக்கை கைவிட அமலாக்கத் துறை முடிவெடுத்ததால் அதன் இயக்குநர் பதவியிலிருந்து ராஜன் கடோச் மத்திய அரசால் தூக்கியடிக்கப்பட்டார்.
தற்போது திடீரென இந்த வழக்கில் சோனியா, ராகுல் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்வதற்கு அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது சோனியா, ராகுலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications