For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணைய தீர்ப்புப்படி எடப்பாடி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள்தான்- பெரும்பான்மை இல்லை!

தேர்தல் ஆணையம் இன்று அளித்த 83 பக்க தீர்ப்பில் எடப்பாடிஅணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தான் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 117 எம்.எல்.ஏக்கள் இல்லை என்கிறது தேர்

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமி பிரஸ் மீட் | அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்- வீடியோ

    டெல்லி: மதுசூதனன் அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இது தொடர்பான தீர்ப்பில் மதுசூதனன் - ஓபிஎஸ்- எடப்பாடி அணிக்கு மொத்தம் 111 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தெரிவித்துள்ளாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பதால் பெரும்பான்மையை இழந்துவிட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் மற்றும் சசிகலா மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் இன்று மதுசூதனன் தலைமையிலான அணிக்கே இரட்டை இலை சின்னம் என தீர்ப்பளித்தது.

    111 எம்.எல்.ஏக்கள்தான்

    111 எம்.எல்.ஏக்கள்தான்

    இது தொடர்பான 83 பக்க தீர்ப்பில், 1877 பொதுக்குழு உறுப்பினர்கள் மதுசூதனன் அணியை ஆதரிப்பதாகவும் 111 எம்.எல்.ஏக்கள் அந்த அணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லோக்சபா எம்.பிக்கள் 34; ராஜ்யசபா எம்.பிக்கள் 8 பேரும் மதுசூதனன் அணியில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சசிகலா தரப்புக்கு 6 எம்.பிக்கள்தான் உள்ளனர் என்கிறது தேர்தல் ஆணையம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உட்பட 20 எம்.எல்.ஏக்கள்தான் சசிகலா அணியில் உள்ளனர் என்கிறது தேர்தல் ஆணையம்.

    இருப்பது 111 தான்

    இருப்பது 111 தான்

    சட்டசபையில் மொத்தம் 234 இடங்கள். சட்டசபையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு 111 எம்.எல்.ஏக்களைத்தான் கொண்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறது.

    நிரூபிக்கனும்

    நிரூபிக்கனும்

    அதாவது தற்போதைய எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை புள்ளி விவரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் பகிரங்கப்படுத்தி இருக்கிறது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    விரைவில் ஆளுநர் நடவடிக்கை

    விரைவில் ஆளுநர் நடவடிக்கை

    இதனடிப்படையில் அனேகமாக வரும் நாட்களில் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடலாம் என்றே தெரிகிறது. அதிரடி காட்டி வரும் ஆளுநர் விரைவில் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கலாம்.

    English summary
    According to the Election Commission verdict the Chief Minsiter Edappadi Palanisamy lead TamilNadu Govt. lost the majority.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X