”ஒரு லட்சம் குடுத்தா 8 லட்சம்... 8 லட்சம்” – ஆன்லைன் பிராடுகளுக்கு வலைவீச்சு
பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த ஒருவரிடம், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் ஒரு லட்சம் கொடுத்தால் ஒரே வருடத்தில் எட்டு லட்சமாக திருப்பி தருவதாகக் கூறி பண மோசடி செய்ய முயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ராஜி நகரை சேர்ந்தவர் ராகேஷ். இவரிடம் கன்னியாகுமரி மாவட்டம் மாங்காடு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் ஒரே ஆண்டில் எட்டு லட்ச ரூபாய் திருப்பித்தருவதாக ஆன்லைனில் தகவல் தெரிவித்திருந்தார்.

இதை நம்பிய ராகேஷ் ஆன்லைனில் இருந்த மொபைல் போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது செந்தில் இரண்டு லட்ச ரூபாயை எடுத்து கொண்டு கிருஷ்ணகிரிக்கு வருமாறு தெரிவித்துள்ளார். ராகேஷ் பணத்தை எடுத்து கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்ததும் செந்திலிடம் போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது செந்தில் கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பர் சுந்தர் என்பவர் வருவார் அவரிடம் நீங்கள் பணத்தை கொடுத்து விடவும் என்று கூறியுள்ளார்.
செந்தில் கூறியது போலவே அங்கு வந்த சுந்தர் உடனடியாக இரண்டு லட்சம் பணத்தை உடனடியாக தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செந்தில், சுந்தர் இருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ராகேஷ் ஏற்கனவே போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
நிகழ்விடத்துக்கு வந்த எஸ்.ஐ மதனலோகன் பணம் வாங்க வந்த சுந்தரை பிடித்து விசாரித்தார். விசாரணையில் அந்த கும்பல் ஆன் லைன் மூலமாக மக்களை ஏமாற்றி பண மோசடி செய்ய முயன்று வரும் கும்பல் எனத் தெரியவந்தது. இதையடுத்து சுந்தரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செந்திலை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications