For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மணிக்கு எல்லோரும் வந்துருங்க.. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏக்நாத் ஷிண்டே அழைப்பு

Google Oneindia Tamil News

கவுஹாத்தி: அசாமில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மதியம் 2 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்கு வருமாறு ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.

ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

தகுதிநீக்க நோட்டீஸால் பதறிய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றத்தில் மனு! இன்று விசாரணை! தகுதிநீக்க நோட்டீஸால் பதறிய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றத்தில் மனு! இன்று விசாரணை!

அணி தாவல்

அணி தாவல்

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 40 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

நம்பிக்கையில்லா தீர்மானம்

அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் இதை உறுதிபடுத்தி இருக்கிறார்.

பாதுகாப்பு நீக்கம்

பாதுகாப்பு நீக்கம்

இந்த நிலையில், அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் உத்தவ் தக்கரே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டில், டிஜிபி ரஜ்னிஷ் சேத் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், "தங்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுவிட்டதாக கூறியுள்ளனர். பழிவாங்கும் விதமாக சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனாவில் குணமடைந்த ஆளுநர்

கொரோனாவில் குணமடைந்த ஆளுநர்

இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பி இருக்கிறார். வந்தவுடனே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா மாநில டிஜிபி, மும்பை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதி இருக்கிறார். இதனை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எழுதிய கடிதத்தையும் அவர் பரிசீலிப்பார் என்று கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே அழைப்பு

ஏக்நாத் ஷிண்டே அழைப்பு

இந்த நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுடன் தொலைபேசியில் ஏக்நாத் ஷிண்டே பேசினார். இந்த நிலையில், 16 எம்.எல்.ஏக்களுக்கு சிவசேனா தலைமை அனுப்பிய தகுதிநீக்க நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதனிடையே மதியம் 2 மணிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே அழைத்துள்ளார்.

English summary
Eknath Shinde calls Rebel Shiv sena MLAs for meeting at 2pm today: அசாமில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மதியம் 2 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்கு வருமாறு ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X