வாக்குப்பதிவின் போது தேர்தல் அறிக்கை வெளியிட தேர்தல் ஆணைய தடை- பாஜகவுக்கு அடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெறும் போது தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாஜக தனது தேர்தல் அறிக்கையை வரும் திங்கட்கிழமை அதாவது ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் சில தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அது தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பை சந்திக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடலாம்.
ஆனால், ஏதேனும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போது கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications