இதற்காக ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.. நான் இதை சொல்லியே தீருவேன்.. மமதா பகீர்!
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த கலவரம் நிறைய பின்விளைவுகளை வரிசையாக ஏற்படுத்தி வருகிறது. நேற்று முதல்நாள் கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரச்சாரம் செய்யும் போது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஆர்எஸ்எஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் கொண்டனர்.

இதனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணியில் இருந்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சார செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது மேற்கு வங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார்.
அதில், நேற்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. மோடிக்கு பின் யாரும் பிரச்சாரம் செய்ய கூடாது என்று இப்படி செய்து இருக்கிறார்கள். அதற்கு பின்பே தேர்தல் ஆணையம் பிரச்சாரத்தை தடை செய்தது.
நான் இதற்காக ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை. நான் இதை சொல்லியே தீருவேன். தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்துவிட்டது. தேர்தல் ஆணையம் பாஜகவின் தம்பி போல செயல்படுகிறது.
ஒரு காலத்தில் தேர்தல் ஆணையம் இப்படி இல்லை. தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு விற்கப்பட்டுவிட்டது.
எனக்கு இது வருத்தமாக இருக்கிறது. ஆனால் இருக்கட்டும், எனக்கு இப்போது பயம் கிடையாது. என் மீது நடவடிக்கை எடுத்தாலும் சரி, நான் தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மைதான் என்று மமதா கூறியுள்ளார்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications