சட்டசபை தேர்தல் குறித்து இன்று டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை
டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளது.
அதிமுக அரசின் ஆட்சிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதே போன்று புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.

இதையடுத்து அந்த 5 மாநிலங்களுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்தப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதுயில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்கள் பெறுவது, கூட்டணியை முடிவு செய்வது என்று தேர்தல் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டன. தேர்தல் ஆணையமும் தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கிவிட்டது.
இந்நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது.
தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதி இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்பட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications