ஆசிரியைகளை மிரட்டிய முலாயம் – எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆசிரியைகளை மிரட்டியதாக எழுந்துள்ள புகாரின் பேரில் முலாயம்சிங்குக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமாஜ்வாடி கட்சி சின்னத்துக்கு ஆசிரியைகளை ஓட்டுப்போட சொல்லி மிரட்டியதாக வந்த புகாரின்பேரில், அந்த கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

சம்மனை பெற்ற சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் "என்னுடைய தேர்தல் பிரசாரத்தில் இது தொடர்பாக எந்த ஆதார குறிப்பு குறித்து பேசமாட்டேன்" என்று உத்தரவாதம் அளித்தார்.
இதனை ஏற்று இனி தேர்தல் நடத்தை விதிமுறையை மீறும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் முலாயம்சிங் மீதான புகாரை தேரத்தல் கமிஷன் தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications