மேற்கு வங்கத்தில் வாலிபரை தூக்கிப் பந்தாடிய யானை: தீயாக பரவிய வீடியோ
புர்த்வான்: மேற்கு வங்க மாநிலத்தில் யானை ஒன்று ஆண் ஒருவரை பொம்மை போன்று தூக்கி எறிந்து தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள மான்டேஸ்வர் கிராமத்தில் யானை ஒன்று ஊருக்குள் நுழைந்து ஆண் ஒருவரின் காலைப் பிடித்து தூக்கி அவரை பொம்மை போன்று வீசியுள்ளது. வயல்வெளியில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த ஊர் மக்களால் அவரை காப்பாற்ற யானை அருகே செல்ல முடியவில்லை.
யானை அவரை தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டுள்ளது.
புர்த்வான் மாவட்டத்தில் உள்ள கல்சி மற்றும் சந்துல் கிராமங்களுக்குள் தனித்தனியாக புகுந்த இரண்டு யானைகள் 4 பேரை தாக்கி கொன்றுள்ளது. 2 பேரை காயப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்சி கிராமத்தை சேர்ந்த ஒருவரை யானை தாக்கி கொன்றுள்ளது. இதையடுத்து யானைகளால் தாக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
யானைகளின் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications