அவசரக் காலங்களில் சென்னை ஈசிஆரில் விமானங்கள் தரையிறங்க அனுமதி
அவசரக் காலங்களில் சென்னை ஈசிஆரில் விமானங்கள் தரையிறங்க இந்திய விமானப் படை அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி: அவசரக் காலங்களில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விமானங்கள் தரையிறங்க இந்திய விமானப் படை அனுமதி வழங்கியுள்ளது.
விமானங்கள் வானில் பறக்கும் போது ஏற்படும் அசாதாரண சூழல் ஏற்பட்டால், அருகில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்று தரையிறக்க வேண்டும்.
இதற்காக, அருகில் இருக்கும் விமான நிலையத்தில் தகவல் சொல்லி முறையான அனுமதி பெற்று விமானம் தரையிறங்குவதற்குள் பைலட், பணியாளர்கள், பயணிகள் என அனைவருக்கும் உயிர் போய் உயிர் வந்துவிடும்.

சாலையோரங்களில் விமானம்
இதுபோன்ற சங்கடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அவசரக் காலங்களில் உடனடியாக விமானத்தை தரையிறக்க இந்திய விமானப் படை சில திட்டங்களை வகுத்துள்ளது. அந்த வகையில் நெடுஞ்சாலைகளில் விமானத்தை இறக்கும் புதிய முறைக்கு விமானப் படை அனுமதி வழங்கியுள்ளது.

சாலையோரங்கள் மாற்றும் திட்டம்
அவசரக் காலங்களில் விமானங்கள் சாலையோரங்களில் தரையிறங்க இந்திய விமானப்படை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து விமானங்கள் தரையிறங்கும் வகையில் சாலையோரங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

ஈசிஆரில் விமானம் தரையிறக்கம்
மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கியது இந்திய விமானப் படை. அந்த வகையில் சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரைச் சாலையில் அவசரக் காலங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

11 நெடுஞ்சாலைகளில் விரிவு
ஏற்கனவே டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையில் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 11 இடங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் விமானங்களை இறக்க இந்திய விமானப் படை அனுமதி வழங்கியுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications