சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராத் கோலிக்கும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாகவே ஒன்றாக சுற்றி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையே விராத் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரு வீட்டு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். திருமண நிச்சயதார்த்தம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறும் போது, "கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் ஒருவருக்கொருவர் அன்போடு இருந்ததால் திருமண நிச்சயதார்த்தமே சரியானது" என்றுள்ளார்.
இருவரும் தங்களுக்குள்ளான காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்கா ரசிகர்களே மனதார வாழ்த்துங்கள்!












Click it and Unblock the Notifications