காதல் முறிவு.. 4வது மாடியிலிருந்து குதித்து பெங்களூர் மாணவி தற்கொலை
பெங்களூர்: பெங்களூரில் காதலன் காதலை முறித்துக் கொண்டதை தாங்க முடியாமல் பொறியியல் கல்லூரி மாணவி மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரில் உள்ள சின்னப்பனஹள்ளியைச் சேர்ந்ந்தவர் நேஹா ரெட்டி(22). நியூ ஹாரிசான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரும், மகாதேவபுராவை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவரும் காதலித்துள்ளனர்.

நேஹா விக்னேஷை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் விக்னேஷின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிய வர அவர்கள் தங்களின் மகனை கண்டித்துள்ளனர்.
காதலை விட்டுவிட்டு ஒழுங்காக படி என்று கண்டித்துள்ளனர். இதையடுத்து விக்னேஷ் நேஹாவை சந்திப்பதை, பேசுவதை நிறுத்திவிட்டார். இது குறித்து நேஹா கேட்டதற்கு காதலை முறித்துக் கொள்வதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு நேஹா விக்னேஷின் வீட்டிற்கு சென்று தனது காதலை ஏற்குமாறு கூற அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நீ இல்லாவிட்டால் இறந்துவிடுவேன் என்று நேஹா கூற அதை விக்னேஷ் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அவர் விக்னேஷின் 4 அடுக்குமாடி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நேஹாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேஹாவை தற்கொலைக்கு தூண்டியதாக விக்னேஷை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications