அதிகாலையில் ஈவ் டீசிங்... " ஆப்ரேசன்ரேமோ ரீட்டன்ஸ்" மூலம் 50 பேரை அமுக்கிய டெல்லி போலீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அதிகாலையில் வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பெண்களை ஈவ்- டீசிங் செய்த 50 பேரை " ஆப்ரேசன்ரேமோ ரீட்டன்ஸ்" என்ற பெயரில் மாறுவேடத்தில் வந்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டெல்லி குருகிராம் பகுதியிலுள்ள எம்சி சாலையில் அதிகாலையிலேயே பல இளைஞர்கள் பெண்களை கேலி செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, " ஆப்ரேசன் ரேமோ ரீட்டன்ஸ்" என்ற பெயரில் பெண்களை கேலி செய்பவர்களை கைது செய்ய போலீசார் களமிறங்கினார்கள்.

அதனடிப்படையில் , இன்று அதிகாலை வேளையில், குருகிராம் பகுதியின் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இடங்களில் பெண்களை ஈவ் டீசிங் செய்த இளைஞர்கள் 50 பேரை இரண்டு மணிநேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிகாலையில் நடந்த இந்த கைது நடவடிக்கை டெல்லி, ஹரியானா பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications