சர்ஜிக்கல் தாக்குதலை சந்தேகிப்பவர்களே பெருமையை ஏற்றுக்கொள்ளட்டும்.. மனோகர் பாரிக்கர் பதிலடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த மாதம், 28ம் தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உள்பட எதிர்கட்சி தலைவர்கள் ராணுவ நடவடிக்கையில் பாரதிய ஜனதா அரசின் பங்கு மிகைபடுத்தப்படுகிறது என குற்றம் சாட்டி இருந்தனர்.

Even those doubting surgical strike can take credit for it, says Manohar Parrikar

சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது என பிரதமர் மோடி கூறி இருந்தார்.இந்த நிலையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறும் போது இதன் முக்கிய பங்கு பிரதமர் மோடியையே போய்சேரும். நான் திட்டமிடல் மற்றும் முடிவெடுத்தல் என்ற அடிப்படையில் ஒரு பங்கை மட்டுமே கோர முடியும்.

யாரெல்லாம் சர்ஜிக்கல் தாக்குதல் நடந்ததா என சந்தேகப்பட்டார்களோ அவர்கள் வேண்டுமானாலும் அந்த பெருமையை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், சர்ஜிக்கல் தாக்குதலின் வெற்றி, ஒவ்வொரு இந்தியனுக்கும் உரித்தானது. எந்த ஒரு அரசியல் கட்சிக்குமானது அல்ல. அது நமது ராணுவத்தால் செய்யப்பட்ட தாக்குதல். எனவே சந்தேகப்படும் நபர்களும் அதில் உரிமை கோரலாம். இவ்வாறு பாரிக்கர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+