தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- சித்தராமையா: பெங்களூரில் பாதுகாப்பு தீவிரம்
பெங்களூர்: பெங்களூர் போலீசார் எந்தவித சவாலையும் சந்திக்க தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ள நிலையில், நீதியை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரெட்டி கூறியதாவது: ஜெயலலிதா மீதான தீர்ப்பை தொடர்ந்து உருவாக்கப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சந்தேகப்படும்படியான சம்பவங்கள் நடந்தாலோ அல்லது, பிரச்சினை என்றாலோ 100-க்கு போன் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் பெங்களூர் போலீசார் முழு திறனுடன் உள்ளனர். எனவே யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடுப்பி சுற்றுப்பயணத்திலுள்ள சித்தராமையா கூறுகையில், "அனைவரும் நீதிக்கும், நீதிமன்றத்துக்கும் மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும். சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
இதையடுத்து பெங்களூரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தமிழகத்திலிருந்து வந்த அதிமுகவினர் வன்முறைகளில் இறங்காமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications