பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள்- தணிக்கை அதிகாரியாக '2ஜி' வினோத் ராய் நியமனம்

இந்த வினோத் ராய் தான் 2ஜி விவகாரத்தில் ரூ. 1.6 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறியவர் என்பதும், ஆனால், சிபிஐ ரூ. 3,000 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் கோயில் நிலவரம் குறித்து ஆய்வு செய்து கடந்த 15ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், பத்மநாப சுவாமி கோயில் சொத்துகளை நிர்வகிப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலை அளிக்கின்றன. இது குறித்து தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. உத்தரவு விவரம்:
திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை நிர்வகிப்பார்கள். அந்தக் குழுவில் பத்மநாப சுவாமி கோயிலின் தலைமை பூசாரி, தந்திரி, 2 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஒருவர் கேரள அரசிடம் ஆலோசனை நடத்திய பிறகு நியமிக்கப்படுவார்.
கோயில் சொத்துகளையும், கணக்குகளையும் முன்னாள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தணிக்கை செய்வார்.
பத்மநாபசுவாமி கோயிலின் முன்னாள் நிர்வாகி ஒருவரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் கோயிலின் செயல் அதிகாரிகளாக இருப்பார்கள்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications