செம்மரக் கடத்தலில் தமிழக, ஆந்திரா முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு? கைது செய்ய போலீஸ் மும்முரம்!!
திருப்பதி: செம்மரக் கடத்தலில் தொடர்பிருப்பதாக கூறி தமிழகம் மற்றும் ஆந்திராவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரை கைது செய்ய ஆந்திரா போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை ஆந்திரா போலீஸ் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த சிலரை கைது செய்துள்ளது ஆந்திரா போலீஸ். மேலும் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் ரூ. 22 கோடி மதிப்புள்ள 11 டன் செம்மரக் கட்டைகளை நேற்று ஆந்திரா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மர குடோன் சவுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமானது. இந்த சவுந்தர்ராஜன் மியான்மர் நாட்டு குடியுரிமை பெற்றவர் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் எனவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த முன்னாள் அமைச்சரைக் கைது செய்யவும் ஆந்திரா போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் மற்றும் ஒரு தமிழக முன்னாள் அமைச்சர், ஆந்திர முன்னாள் அமைச்சர் ஆகியோரும் விரைவில் இந்த செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆந்திரவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் முன்னாள் அமைச்சர்தான் முதலில் கைது செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகள் பலரது தலையையும் செம்மரக் கடத்தல் வழக்கில் உருட்டிவிடுவது என ஆந்திரா போலீஸ் முடிவு செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications