மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்குப் பிறகு எக்ஸிட் போல் கணிப்புகளை வெளியிடலாம்... தேர்தல் ஆணையம்
டெல்லி: மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 16-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி தொடங்கி வரும் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் கடைசி கட்ட தேர்தல் 41 தொகுதிகளுக்கு வரும் 12-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு சாதகமாக கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தேதல் முடியும் வரை கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான எச்.எஸ்.பிரம்மா நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் முதலில் கூறுகையில், ‘மே 12ம் தேதி தேர்தல் முடிந்தாலும் கூட வாக்கு எண்ணிக்கையான மே 16க்கு முன்பு சில இடங்களில் மரறு வாக்குப்பதிவுககு வாய்ப்பு இருப்பதால் கருத்துக்கணிப்புகளை 16ம் தேதி வரைக்கும் ஒளிபரப்பக் கூடாது என்று கூறினார்.
ஆனால் அவரே பின்னர் தெளிவுபடுத்துகையில், ‘மே 12ம் தேதி வரை மட்டுமே கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்பக் கூடாது. அதன்படி மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்பலாம்' என விளக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications