ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு... பதற்றம் - பயங்கரவாதி கைது
ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வெடித்துள்ளது. விமான நிலையத்திற்கு அருகே நார்வல் பகுதியில் வெடி பொருட்களுடன் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் நள்ளிரவில் இரண்டு முறை குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பினால் எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. விமான நிலையத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் ஜம்மு விமான நிலையத்தின் மேற்கூரை பகுதியிலும் தொழில் நுட்ப பகுதியிலும் குண்டு வெடித்த சத்தம் கேட்டது. அந்த இடத்திற்கு உடனடியாக வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர். பாதுகாப்புப் படையினரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடித்த இடத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 5 கிலோ வெடி பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ஜம்மு காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு விமான நிலையில் குண்டு வெடித்தது பற்றியும் சேத நிலவரங்கள் பற்றியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை என்பதால் குண்டு வெடிப்பினார் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது பற்றியும் சேத மதிப்பு பற்றியும் தகவல்கள் தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications