பாதுகாப்பு இல்லாமல் எய்ட்ஸ் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப் போய் பாதிப்புக்குள்ளான கேரள டாக்டர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவின் போதிய பாதுகாப்பு எடுத்துக் கொள்ளாமல், எய்ட்ஸ் நோயாளிக்கு சிகிச்சை அளித்த 3 டாக்டர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட மருத்துவ குழு தற்போது சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள் மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த மாதம் 29ம் தேதி விபத்தில் காயமடைந்த ஒருவரைச் சிகிச்சைக்காகக் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்துள்ளது. அப்போது உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், அந்நோயாளியின் காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் ஒரு மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை அளித்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக நோயாளிக்கு பயன்படுத்திய ஊசியால் மருத்துவர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்குப் பிறகு நோயாளியின் ரத்தப் பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்நோயாளிக்கு இரண்டு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்த 3 மருத்துவர்கள் உட்பட 12 மருத்துவமனை ஊழியர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊசிகள் மூலம் எய்ட்ஸ் பரவுவது என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால் அந்த நோயாளியின் உடல் நலக்குறைபாடு குறித்து டாக்டர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. மேலும், அந்த நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையும் சில நாட்கள் கழித்தே வந்ததும் குழப்பத்திற்குக் காரணம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications